தங்கம் நான் பிறந்து இருக்கவே கூடாதுடா – சாகும் முன் உருகி உருகி காதலன் காதலிக்கு மெசேஜ்
Written by Ramaravind B Published on Apr 25, 2023 | 11:17 AM IST | 61
Follow Us

கிருஷ்ணகி ரி மாவட்டம், பர்கூர் அருகே, காதலியின் தாய் திட்டியதால், மனமுடைந்த காதலன், WhatsAppல், காதலிக்கு, உருக்கமான message, அனுப்பிவிட்டு, தூக்கு போட்டு, தற்கொலை செய்து கொண்ட, சோக சம்பவம், நடந்துள்ளது. இதன் பின்னணியை, விவரிக்கிறது, இந்த தொகுப்பு. தொடர் செய்திகளுக்காக, இணைந்திருங்கள், தந்தையுடன்
நான் பிறந்திருக்கவே கூடாதுடா. நானே செத்துப் போயிடுறேம்மா. நீ சந்தோஷமா இரு. என தற்கொலைக்கு முன் காதலன், தனது காதலிக்கு அனுப்பி வைத்த, உருக்கமான message இது
தான். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த, கொண்டப்ப நாயனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த, மாது என்பவரது மகன், சசிகுமார்
கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் cell phone விற்பனை கடையில் பணிபுரிந்து வந்த சசிகுமார், அதே கடையில் பணிபுரிந்த, ஜோன் சில்வியா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மலர்ந்துள்ளது. இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களது திருமணத்திற்கு, பெண் வீட்டார் சார்பில், எதிர்ப்பு கிளம்பியுள்ளது
ஆனாலும், மகனின் காதல் ஆசையை, பூர்த்தி செய்ய நினைத்த, சசிகுமாரின் பெற்றோர், பெண் வீட்டாரிடம் பேசி, சம்மதம் வாங்கியுள்ளனர். இதனால், மகிழ்ச்சியில் துள்ளி குதித்த, காதல் ஜோடிக்கு, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான்,
திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. திருமண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில், வீட்டில் சசிகுமார், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகன் தூக்கில் தொங்குவதை கண்டு, அதிர்ச்சி அடைந்த பெற்றோர்,
அழுது துடித்துள்ளனர்
வேலைக்கு போற இடத்துல, ஒரு பொண்ண love பண்ணான். அந்த love பண்ணி, அந்த பொண்ண தான் கல்யாணம் பண்ணிக்குவேன். எனக்கு வேற பொண்ணு வேணான்னு சொன்னான்
உன் இஷ்டமே சாமின்னு, நான் அந்த பொண்ணை, நிச்சயம் பண்ணேன். நிச்சயம் பண்ணிட்டு வந்து, மூணு மாசம் ஆச்சு. மூணு மாசமா, பத்திரிகை அடிக்கிற போகக்குள்ள, அவங்க அம்மாகிட்ட, என்ன பேசினானோ தெரியலே
ராத்திரி வந்து, எவ்வளவு நேரத்துக்கு, தூக்கு போட்டுருந்தானோ, காலையில எழுந்து பார்த்தேன். காலையில எழுந்து பார்த்தா, என் மகள் தொங்குறா. நானு போயி, stationல complaint கொடுத்தேன். அவங்க எடுக்கல, என் பையனுக்கு நியாயம் கிடைக்கணும்
தகவலின் பேரில் வந்த போலீஸார், உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், சசிகுமாரின் cell phoneஐ கைப்பற்றி, போலீஸார் சோதனை நடத்தியபோது, காதலி,
ஜோன் சில்வியாவின், WhatsApp எண்ணிற்கு, தற்கொலைக்கு முன், message அனுப்பி இருப்பது, கண்டறியப்பட்டது. அந்த messageஐ, நான், ஊருக்கு வந்துவிட்டேன், தங்கம். நான், அவ்வளவு பெரிய, கொடூரக்காரனாடா? நீயும் கஷ்டப்படாத. நான், பிறந்திருக்கவே கூடாதுடா
நானே செத்துப் போயிடுறேன். நீ சந்தோஷமா இரு, என இருந்துள்ளது. WhatsApp message வைத்து பார்க்கும் போது, மகனின் தற்கொலையில், சந்தேகம் இருப்பதாகவும், உடலைப் பார்க்கக் கூட, காதலி மற்றும் அவரது வீட்டார் வராததால்,
அவர்கள்தான், மகனின் இறப்பிற்கு காரணமாக இருக்கக்கூடும் என, சசிகுமாரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், போலீசாரிடம், கண்ணீர் மல்க, கோரிக்கை விடுத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, policeஆர், வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வரும் நிலையில்,
சசிகுமாரின் இழப்பை நினைத்து, குடும்பமே கதறி அழுவது, மன வேதனையை அளிக்கிறது.
Comments: 0